Thursday, August 11, 2011

மாணவா்களுடன் வெளிக்கள பயிற்சிக்காக நீர்கொழும்பு சென்றிருந்தபோது..







ஊடகவியலாளா்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லா்

(பூங்காவனத்தில் வெளியானது.)

1.உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை பூங்காவனம் வாசகர்களுக்காக கூறுங்கள்?
பெய - எம்.எஸ்.தேவகெளரி.
பிறந்தது படித்தது- கிளிநொச்சி
பட்டப்படிப்பு -யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்(தமிழ் சிறப்பு)
கொழும்பு பல்கலைக்கழகம் பத்திரிகையியல் டிப்ளோமா.
முதல் தொழில் - கல்வித்திணைக்களம்-எழுதுவினைஞர்
ஆர்வத்துடன் இணைந்தது- வீரகேசரி பத்திரிகையாளர்(1993)
தினக்குரல்-ஞாயிறு பதிலாசிரியர்(1997)
தற்போது- இலங்கை இதழியல் கல்லுரரி விரிவுரையாளா்(2005-)
பிடித்தது - பயணங்கள்.
நுாலானது-பல்கலைக்கழக ஆய்வு -80களில் மல்லிகை விமா்சனங்கள்
பங்களிப்பு,ஈடுபாடு - ஊடகத்துறை,
பால்நிலை சமத்துவம்.
நுால்களை செம்மைப்படுத்தல்.
(கல்வித்திணைக்களம்,பெண்கள் தொடர்பூடக கூட்டமைப்பு.)

2. இலங்கை ஊடகவியல் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் நீங்கள் அத்துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் என்ன?
ஊடகத்துறையை நான் தோ்ந்தெடுத்ததே சிந்தனைச் சுதந்திரத்திற்கான வழியாக அது இருந்ததாலேயே.அதை கற்பிக்கும் போதும் மற்றவா்களிடையே சிந்தனையை விரிவுபடுத்தி ஆளுமையில் பல பாரிமாணங்களை ஏற்படுத்த முடியும்.அதை ஊடகங்களுடாக வெளிப்படுத்தவும் முடியும்.இந்த வழியை நான் மற்றவர்களுக்கு முறைமைப்படுத்தப்பட்ட கல்வியினுாடாக வழங்கும் போது தொழில் திருப்தி ஏற்படுகிறது.

3. ஏற்கனவே பத்திரிகைத்துறையில் கடமையாற்றிய நீங்கள்இ அந்த அனுபவம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அது எனக்கு ஒரு தொழிலாக தொpயவில்லை.வாழ்ந்ததே அதற்குள்தான்.எதை வாசகா்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு ,தவறுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவனம், பல ஊடகத்தொடா்பாளா்களை திருப்திப்படுத்வேண்டிய கடமை,எல்லாமே என்னை பட்டைதீட்டிக்கொள்ள சிறந்த அனுபவமாக இருந்தது.

4. நீங்கள் சிறுகதைத்துறையில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். தற்போதைய எழுத்துநிலை எவ்வாறு இருக்கிறது?
ம்....உண்மைகளை மட்டுமே எழுதப்பழக்கிய பத்திரிகைத்துறையில் இணைந்த பின் கற்பனை பண்ண முடியவில்லை.இனி மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
5. ஊடக்கல்வியை கற்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
எதுவும் முறைமைப்படுத்தப்பட்ட கல்விமுறைக்குள்ளால் வரும் போது அதில் நோ்த்தி திறன் அதிகமாகவே இருக்கும்.ஊடகத்துறையும் அவ்வாறானதே.பயிற்சியினுாடாகத்தான் இதை நாம் வழங்குகின்றோம்.இலகுவில் விரைவாக ஊடகத்துறை நுணக்கங்களைப் பெற்றுக்கொள்ள இத்தகைய கல்வியைப் பெறுவதே சிறந்த வழி.

6. ஊடகக் கல்வியானது படப்பிடிப்புஇ செய்தி சேகரித்தல் போன்றவற்றில் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?
ஊடகக்கல்வி என்பது எழுதுவதற்கோ ,செய்தி வாசிப்பதற்கோ பழகுவது மட்டுமல்ல.ஒரு ஊடகவியலாளன் பத்திரிகையுடன் இணைந்து வேலை செய்ய வேண்டுமென்றால் ஒரு செய்தியைக் கண்டுபிடிப்பது,அதை சரிவர பெற்றுக்கொள்வது அதற்கான புகைப்படம் எடுப்பது, அதை கணினி மயப்படுத்துவது.சரி பிழை பார்ப்பது,பக்க வடிவமைப்புச் செய்வது என சகல துறைகளிலும் அறிமுறை,நடைமுறைப் பயிற்சியும் வழங்குகிறோம்.இன்று நவீன ஊடகங்களின் வருகை ஊடக இணையத்தளங்களை உருவாக்கியுள்ளது.இது பல்லுhடக செயற்பாட்டைக்கொண்டது.அதாவது பத்திhpகை வானொலி தொலைக்காட்சி மூன்றும் இணைந்த செயற்பாடு.எனவே ஒரு ஊடகவியலாளனும் பல்துறைத் திறன் மிக்கவராக இரு;த்தல்வேண்டும்.எனவே மாணவர்களுக்கு வெளியில் சென்று செய்தி சேகரிக்கவும் அதை எப்டி எழுதவேண்டும் என்றும் அதற்காக படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்றும் பக்கத்தை எப்படி வடிவமைக்கவேண்டும் என்றும் பயிற்சியளிக்கிறோம்.இது இவை இன்றைய நவீன யுகத்தில் மிக முக்கியமானவை.

7. இன்று இலங்கையில் எத்தனை ஊடகக்கல்வி நிறுவனங்கள் தொழிற்படுகின்றன? அதில் எத்தனை மாணவர்கள் கல்வி கற்கின்றனர்? எத்தகைய தகைமை கொண்டோர் இந்தத்துறைக்குள் சேர்க்கப்படுகின்றனர் என்று கூறுங்கள்? அது பற்றி விரிவாக குறிப்பிடுவீர்களா?
ஊடககல்வி நிறுவனம் என்ற வகையில் முழுநேரக் கற்கை நெறியாக முதன் முதல் ஆரம்பித்ததும் தொடர்ந்து செல்வதும் இலங்கை ஊடகவியல் கல்லுாரி மட்டுமே.இது இலங்கையிலுள்ள ஊடகநிறுவனங்களின் தலைவர்களின் அமைப்பு,பத்திரிகையாசிரியா்களின் அமைப்பு,சுதந்திர ஊடகவியலாளா்கள் அமைப்பு மற்றும் ஊடகவியலாளா'கள் இணைந்த பல அமைப்புகள் இணைந்து உருவாக்கியதே இலங்கை ஊடகவியல் கல்லுாரி .இதற்கு ஆலோசனையும் அனுசரணையும் வழங்கி வருகிறது சுவீடன் நாட்டின் போஜோஎன்ற ஊடகவியற் கற்கைக்கான நிறுவனமும் சுவீடன்கல்மா பல்கலைக்கழகமும்.
இங்கே தமிழ்,சிங்கள,ஆங்கில மொழிமூலம் பத்திரிகை,வானொலி,தொலைக்காட்சி ஆகிய பிரிவுகளில் கற்பிக்கப்படுகிறது..இது ஒருவருட ஊடகவியல் டிப்ளோமா பயிற்சி நெறி. திங்கள் தொடக்கம் வௌ்ளி வரையான முழுநேர கற்கை நெறி.க.பொ.த உயா்தரத்தில் 3பாடங்களில் சித்திபெற்ற ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவா்கள் பொதுப் பாரீட்சை ஒன்றின் மூலம் சோ்த்துக்கொள்ளப்படுகின்றனா்.ஒவ்வொரு மொழியிலும் ஒரு பிரிவில் 10 மாணவாகளே சோ்த்துக்கொள்ளப்படுவா் .பத்துப்பேருக்கும் சிறந்த பயிற்சி வழங்குவதே இதன் நோக்கம்.நிரந்தர விரிவுரையாளா்களும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளா்களும் இங்கு மாணவா்களுக்கு பயிற்சிகளை வழங்குவா்.

8. ஊடகவியலாளர்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லர். இலக்கியவாதிகள் ஊடகவியலாளராக இருக்கின்றனர் என்ற கருத்தோடு ஒன்றிக்கிறீர்களா? ஏன்?

இல்லை.ஊடகவியலாளா்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லா். அதே போல் இலக்கியவாதிகளும் ஊடகவியலாளராக செயற்படுகின்றனா் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஆனால் இலக்கிய வாதிகளில் சிலா் ஊடகவியலாளா்களாக இணைந்து செயலாற்றுகின்றனா். ஊடகவியல் என்பது உண்மையை துல்லியமாக பக்கசா்பின்றி முன்வைத்தலாகும்.இதற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை.ஆனால் இலக்கியவாதிகளின் சமூக ஆவம்,மொழி ஆளுமை ஊடகவியல் துறைக்கு பொரிதும் கைகொடுக்கும்.ஆரம்பத்தில் எழுதத் தொரிந்த இலக்கியவாதிகள் தான் ஊடகத்துறையில் இணைந்து கொண்டனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.பேராசிரியா் கைலாசபதி ஒரு சிறந்த இலக்கியவாதி விமர்சகா் ஆய்வாளர்அவா் தினகரன் ஆசிரியராக இருந்தவா்.

9. உங்களிடம் கல்வி கற்கும் மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை எப்படி ஊக்குவிக்கலாம் என நினைக்கிற்Pர்கள்?
ஒரு ஊடகவியலாளனுக்கு எல்லாத்துறையிலும் கொஞ்சம் தொரிந்திருக்கவேண்டும்.அந்த வகையில் இலங்கை எழுத்தாளா்கள், சிறந்த நுால்கள். விமார்சனங்கள் பற்றி மாணவார்களுடன் உரையாடுவோம்.மாணவர்களும் தமது ஆர்வத்தால் எமது நுாலக வளங்களை நன்கே பயன்படுத்துவா்.

10. ஊடகத்துறையில் ஏற்படும் சவால்கள் என்று எதையேனும் குறிப்பிடலாமா?
உண்மையை மிகச்சரியாக பக்க சர்பின்றி முன்வைத்தலே ஊடகத்தொழிலின் அடிப்படை. அதுவே பெரிய சவால்தான்.பிறாரிடம் கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களை கையாள்வது தனிமனித ஆளுமையுடன் சம்பந்தப்பட்டது.ஒரு செய்தியை 5ஊடகவியலாளா்கள் இனம் கண்டாலும் அதை சரியாக ஊடகங்களில் முன்வைக்கும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.எனவே ஊடகத்துறையே ஒரு சவால் மிக்கதுறைதான்.சிறந்த முறையில் பணியாற்றுவதற்கு; வெளியிலிருந்தும் உள்ளுக்கு இருந்தும் பல தடைகள் பல வடிவங்களில் வரும் அவற்றை கடப்பதும் லாவகமாக கையாள்வதும் எம் முன் உள்ள சவால்தான்.

11. இளம் ஊடகவிளலாளருக்கு அல்லது ஊடகத்துறை மாணவர்களுக்கான உங்கள் ஆலோசனை என்ன?
ஊடகத்தினுாடாக வெளிவரும் ஒவ்வொரு சொல்லும் மக்களிடையே அதிக தாக்கத்தை விளைவிக்க வல்லன.மக்களிடையே கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள பாரியளவில் பங்களிப்பவை ஊடகங்களே.எனவே உண்மையான செய்திகளை துல்லியமாகவும் நியாயமாகவும் பக்கசர்பின்றியும் முன்வைக்க அதிகபட்சம் முயலவேண்டும்.எந்த சந்தா்பத்திலும் யாருடைய தலையீட்டுக்காகவும் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல வேண்டாம்.எப்போதும் ஊடகவியலாளருக்கான ஒழுக் நியமங்களை கருத்தில் கொள்ளுங்கள்.

12. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
வைத்தியர்,பொறியியலாளா்,கணக்காளா் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதைப்போல் ஊடகவியலாளா் என்று சொல்லிப் பெருமைப்பட தொழில் வாண்மை(Professional) மிக்க தொழிலாக இது மாறவேண்டும்.அதற்காக தொழில் தகைமையை வளா்த்து உயா்தர ஊடக கலாசாரத்தை பேணிக்கொண்டு செயற்பட சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.
நன்றி:பூங்காவனம்.