Wednesday, March 06, 2013

அரசு -ஊடகம் -மதம் - பெண்களைப் படுத்தும் பாடு!!!


நன்றி தினக்குரல் :27.01.2013
மைய நீரோட்டத்தை திசைதிருப்பும் 'மாபியாக்கள்' -  அரசு -ஊடகம் -மதம்

 -பெண்களுக்கெதிரான வன்கொடுமையும் கருத்துருவாக்கங்களும்.

'இரவு நேரத்தில் பெண் ஏன் வெளியில் சென்றாள்?'
'அவள் உடுத்திருந்த ஆடை ….'
'அவள் கடவுளின் பெயரைச் சொல்லி அவர்களிடம் கெஞ்சியிருக்க வேண்டும்.'

டெல்லியில் கடந்த டிசெம்பர் 16ஆம் திகதி;; ஓடும் பஸ்சில் ஒரு மருத்துவபீட மாணவி தன் காதலனுடன் சென்று கொண்டிருக்கும் போது 6பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டாள்.ஒரு வாரத்திற்குள்  சிகிச்சை பலனின்றி மரணமானார்.அந்த சந்தர்ப்பத்தில் முன்னெழுந்த குரல்களில் இவையும் அடங்கியிருந்தன.

 டெல்கி சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்திய குரல்கள் மிகச்சாதாரண மனிதர்களிடம் இருந்து வெளிப்பட்டவையல்ல என்பது இங்கு கவனிக்கதக்கது.

ஆநாகரிகம் என்ற தலைப்பில் டிசெம்பர் 20ஆம் திகதி தினமணியில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் சொல்கிறது 
'தனது அறியாமையால் தனக்கு துன்பத்தை தேடிக்கொண்டர்...என்று கூறி 'இரவு 9.30மணிக்கு ஒரு தனியார் சொகுசு பேருந்தில் அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டும் இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார்.அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறெதுவும் இல்லை....என்று கூறிபெண்கள் சில சுயகட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும் உள்ளுணர்வும் அவர்களை;ப பல்வேறு பாலியயல் வன்முறைச்சூழலில் சிக்காதபடிபாதுகாக்கும்.தீதும் நன்றும் பிறர் தரவாரா.என்ற முடித்திருந்தார்.பாலியல் வன்ழுறையை தவிர்பதற்கு ஆடை தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதே நேரம் பெணகள் தமது ஆடை விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அரசியல் வாதி ஒருவர் கருத்து தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திவெளியிட்டிருந்தன.
வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆன்மீக குரு அஷாரம்(யுளாயசயஅ) தன் பக்தர்கள் முன்னிலையில் குறிப்பிடும் போது 'இதில் இருவருமே குற்ற வாளிகள்.அந்த பெண் கடவுளின் பெயரைச் சொல்லி தன்னை தாக்க வந்தவர்களிடன் கெஞ்சி இறைஞ்சி கேட்டிருந்தால் இதைத்தவிர்த்திருக்கலாம்.”என்பதாக தன் கருத்தை முன்வைத்திருந்தார்.
இதைவிட நடந்த பெரிய போராட்டங்களும் அறிக்கைகளும் ஊர்வலங்களும் சட்டதிருத்தம் பற்றியும் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் சமத்துவம் பற்றியும் முன்வைத்த கருத்துக்களும் உண்டு.ஆனால்
இந்த 3 தரப்பினரின் குரல்கள்; சாதாரணமாக ஒதுக்கி விடக்கூடியவைல்ல.இவர்கள் மூவருமே தாம் இருக்கும் பதவிநிலை சார்ந்து மக்கள் மனங்களில் கருத்துருவாக்கததை மிக இலகுவாக செய்யக்கூடியவர்கள்.சமூக சட்டதிட்டம் ஒழுங்கமைப்பில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பாரிய தாக்கம் விளைவிப்பவர்கள்.இவர்களின் கருத்து இத்தகையதாக இருப்பது சமூகத்தின்  இருப்புக்குஇஇயங்கு நிலைக்கு நல்லதல்ல.
இவர்கள் திட்டமிட்டு இப்படியான கருத்தை முன்வைக்கிறார்களே;h என்றும் எண்ணத் தோன்றுகிறது.ஆண்மைய கருத்து நிலையில் மட்டும் நின்று எப்படி இப்படி பொறுப்பில்லாமல் பொது தளத்தில் கருத்தை விதைக்கிறார்கள் ?
பெரும் குற்றம் ஒன்ற புரியப்பட்டுள்ளது.அந்த குற்றம் புரிந்தவர் மீது ஏற்படுத்தப்படவேண்டிய கேள்வி இத்தககைய குற்றத்தை விபத்தாக ஏற்றுக்கொண்டு செல்லும் சமூக எண்ணப்பாங்குகளில் ஏற்படுத்தப்படவேண்டிய கேள்விஇஇத்தகைய குற்றத்தை இல்லாதொழிப்பதற்கு குறைந்த பட்சம் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாத சட்டம் அரசு சார்ந்து ஏற்படுத்தப்படவேண்டிய கேள்வி என ஆயிரம் கேள்விகள் இருக்கின்றபோது குற்றத்துக்குட்பட்டவரை நீ போனதுதான் தவறுஇநீ உடுத்தியதுதான் தவறுஇநீ இறைவனை தொழாதது கெஞ்சிக் கேட்காதது தான் தவறு என மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடுவது எந்தவிதத்தில் நியாயம் ?எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியது? சமூகப்பொறுப்பற்ற தன்மையாகத்தான் நாம் இதைப்பார்க்கவே;ணடியுள்ளது.கேட்டால சமூகப்பொறுப்புடன் தான் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளோம் என்பர்.பெண்களை பாதுகாக்கவே இப்படிச் சொல்கிறோம் என்பர்.
அப்போ எமக்கு ஒரு கேள்வி எழுகிறது.சமூகத்தில் பெண்கள் யார்?அரசு என்றால் உடனே மனதில் ஓடுவது ஆண்களின் விம்பம்.அது போல் சமூகம் என்றாலும் ஆண்கள் மட்டும்தானா? 
இலங்கை என்றதும் பௌத்த சிங்களவர் மட்டும் நினைவில் வருவது சரியா?பல்லினத்தன்மை பற்றி ஏன் சிந்திக்க தூண்டுகிறோம்?
இப்படித்தான் சமூகத்தின் சரிபாதியினர் பெண்கள்.அந்த சரிபாதியினருக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் எப்படி இருந்தால் நடந்து கொண்டால் பிரச்சினை தீரும் என்று யோசிப்பதா?அல்லது பிரச்சினை எங்கிருந்து வருகிறது இதடுப்பதற்கு என்ன வழி என்று யோசிப்பதா ஆரோக்கியமானது.?
பெண்களின் பன்முகத்தன்மையையும் ஆண்களின் பன்முகத்தன்மையையும் புரிந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்காது ஒற்றைக்கோட்டில் ஒரு பக்கம் சார்ந்து கருத்துக்களை முன்வைப்பது ஆரோக்கியமானதல்ல பிரச்சினைக்hகன தீர்வுமல்ல.ஏனெனில் சமூகம் என்பதற்குள் பெண்களை அடக்காத ஆண்மைய சிந்தனையின் வெளிப்பாடு இது.ஆண்களின் சமூகத்தில் பெண்கள் வாழவேண்டுமென்றால் எப்படி எப்படி இருக்கவேண்டும் இயங்கவேண்டும் என்பதே இதன் தொனிப்பொருள்.
இலங்கையில் கடந்த வருட இறுதிப்பகுதியில் வெளிவந்த அறிக்கைகள் பத்திரிகைக்கட்டுரைகளின் அடிப்படையில் சில தகவல்கள் இப்படிக் கூறுகின்றன.
பொதுப் போக்குவரத்தில் 43வீதமான பெண்கள் பாலியல் சேட்டைகளுக்குள்ளாவதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏன் இந்த நிலை?இந்த இடத்தில் இந்த இடத்தில் ஆடையா?காலமா?கடவுளா?  புpரச்சினை.இவை எதுவும் இல்லை..இங்கிருந்து தான்  பால் நிலை தொடர்பான சமூகச் சூழல் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.ஆண் பெண் பால்நிலைப்பாத்திரங்களில் உள்ள ஏற்றதாழ்வு பற்றி கவனிக் வேண்டியுள்ளது.
முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாழிகளின் இடமே பெண்களுக்கு.ஆனால் இன்று ஒவ்வொரு நாட்டினதம் அரசியல் சாசனம் மறறும்; ஜக்கிய நாடுகளின் சம்பிரதாயங்களும் ஆண்பெண் சமமானவர்கள் சமத்துவமுடையவர்கள் என்றேதான் தன்குறிப்பில் வைத்துள்ளது.
நடைமுறையில் ஏன் கணிப்பு பெறவில்லை?தமிழும் சிங்களமும் தேசிய  மொழி என ஏட்டில் உண்டு.ஆனால் நடைமுறையில்..... ;.ஆதிக்கமும் அதிகாரமும் எங்கு குவிந்திருக்கிறதோ அங்கு அதன்குரல் ஒலிக்கும்.ஜனநாயகம் என்பது மாயை.ஜனநாயகத்திலும் பெரும்பான்மையினரின் கருத்துத் தானே முன்னுரிமை பெறுகிறது.(மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் அரசு: ஜெனநாயக அரசு).ஜனநாயகத்தை சரியாக புரிந்து கொண்டால் அங்கு சிறுபான்மையினரின் கருத்தும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்ற பண்பு இருப்பதாவது புரியம்.இந்த புள்ளிகளில் ஆண் பெண் சமத்துவம் பால் சமத்துவம் பற்றிய புரிதல்களை சிந்திக்க வேண்டும்.அத்தகைய சிந்தனைகளினுடாகத்தான் இந்த பெண்களுக்கெதிரான் வன்முறைகளுக்கான தீர்வுகளை நோக்கி பிரயாணப்பட முடியும்.
 முpக இலகு வழியாக குற்றத்திற்கு உட்பட்டவர் மீதே குற்றத்திற்கான காரண காரியங்களை கட்டமைத்த மேற்கூறிய அரசியல்; மதம் ஊடகம் என முக்கிய  முத்திறத்தவர்களும் சிந்திக்க வேண்டிய மற்றொரு பக்கம் பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டும்..
; ‘கடந்த சில மாதங்களுக்குள் (2012இல்)900 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.அதில் ஏறத்தாள 700 சம்பவங்கள் பராயமடையாத பெண் குழந்தைகளுக்கு எதிராக புரியப்பட்டவை.’ என முன்னாள் பொலீஸ் பேச்சாளர் அஜித் ரோகண கூறியுள்ளார்.
மேலும்  கடந்த வாரத்தில்மட்டும்(ஜனவரி -2013) 5 பாலியல் வல்லுறவுச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதில் வல்லுறவுக்கு பின்னரான கொலைகள்2 இடம் பெற்றுள்ளன.என  யாழ்ப்பாண பொலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.இதில் மண்டைதீவில் 4வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள்.
இதைவிட கடந்த 2 வருடங்ளில்(2011இ2012) 207 சிறுமிகள் பாலியல் து~;பிரடீயாகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ் சட்டவைததிய அதிகாரி தெரிவித்ததானக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சிறுமிகள் இரவில் நடமாடித்திரிந்தவர்களா?கவர்ச்சியாக ஆடைஅணிந்தவர்களா?கடவுளே என கதறாமல் விட்டவர்கள?ஏன் இந்த வன்கொடுமை?
இலங்கை நிலைவரத்தில் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்கொடுமைகள் சட்ட நிர்வாக சீர்குலைவு இபோருக்கு பின்னான காலம் இஎன்பதற்குள்ளாலும் பார்க்கப்படுகிறது.இவற்றையும் கடந்து ஆண்பெண் நிலைசார்ந்து சிந்திக்க வேண்டும் என்பதும் எல்லா அதிகார நிறுவனங்;கள் சார்ந்தும் சிந்திக்க வே;ணடும் என்பதும் குறிபிடபடவே;ண்ய ஒன்று.

எனவே பெண்களுக்கெதிரான் பாலியல் வன்கொடுமை பற்றிய கருத்தாடல்கள் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றாவது குறைந்த பட்சம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.ஏற்கனவே எம் பொதுப்புத்தியிலுள்ள பெண்கவர்ச்சி தொடர்பாக கேள்வி எழுப்பவேண்டும்.மூடிக்கொண்டு சென்றால் பெண்கள் காப்பாற்றப்படுவார்களா?எதை மூடாததால் சிறுவர்கள் இதற்கு ஆளானார்கள்?
உண்மையில் புலக்காட்சியில் இருந்து மட்டும் சிந்திக்கும் குழந்தைத்தனமான கருத்தை மறுதலித்து ஆழமாக சிந்திக்கவேண்டிய பொது தளம் ஒன்று உண்டு எ;பதைNயு இந்த பகுதியில் முன்னிறுத்தியுள்ளோம்.
அதே நேரம் பெண்களின் செயற்பாடுதான் பாலியல் வன்கொடுமைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது போன்ற கருத்துக்களால் ஆண்களின் பாலுணர்வு ‘செக்கென்ன சிவலிங்கமென்ன’ என்ற நிலைக்கு தள்ளப்ட்டுள்ளதையும்  மனங்கொள்ள வேண்டியுள்ளது. 
இன்னொரு புறம் பெண்களுக்கெதிரான இந்த பாலியல் வன்கொடுமைக்கு  வயது வேறுபாடின்றி பெண்கள் உட்படுத்தப்படுவதால் இந்த விடயம் பெண்ணின் பாலுறுப்பில் மட்டும் மையங்கொண்டுள்ளதா எனவும் அதிர்ச்சியுறவேண்டியுள்ளது.
இதிலிருந்து நமது சமூகத்தில் ஆண்பெண் தொடர்பான எண்ணப்பாடுகள் எத்தகையதாக உள்ளன?ஆண்நிலை இயல்பு எமது சமூகத்தில் எத்தகையதாக இருக்கிறது என்பது பற்றியும் வெளிக்கொண்டுவரவேண்டியுள்ளது.
ஊலகெங்கும் பெண்களுக்கெதிரான வன்கொடுமையை இல்லாதொழிப்Nபுhம் என்ற கோசமும் தொடர் நிகழ்வுகளும் பலவிதங்களிலும் நடைபெற்றுக்கொண்டிரு;ககும் இந்த வேளையிலாவது இதைப்பற்றி நாம் சிந்திப்Nபுhமா?

எம்.எஸ்.தேவகௌரி








1 comment:

Anonymous said...

நல்ல பதிவுகள்.
தொடர்ந்து பதிவிடுங்கள்