Friday, May 30, 2014

நாம் பேசுவது இப்படி இருக்கிறது...


ராணி :இஞ்ச...அவள் சுதாவைப் பாத்தியே புருசன் இல்லாம இரண்டு பிள்ளைகளையும் எப்பிடி வளர்க்கிறாள் எண்டு?

ரூபா: ஓம்..ஓம்..எங்கமாய் எப்பிடி காசு சம்பாதிக்கிறாளோ தெரியாது..

ஏய்..இப்பிடி கதைக்காத.. அவள் தான் படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி கடையில 'சேல்ஸ் கேளா' வேல செய்யுறாள்
ரூபா: ஓம்..ஓம்.. என்னத்த விக்கிறாவெண்டு ஆருக்குத் தெரியும்?
பொத்து வாயை இப்பிடிக் கதைக்க உனக்கு வாய் கூசுறது இல்லையா?
ஏன் இப்ப இப்பிடி கத்துறாய்.. ஊரில எல்லாரும்தான் அவளப்பத்தி கதைகதையா சொல்லீனம்..உலவாயை மூடினாலும் ஊர் வாயை மூடேலுமே?
சும்மா.. போ..தரங்கெட்ட ஊர்.. வாழ்ந்தலும் பேசும். தாழ்ந்தாலும் பேசும். அவள் புருசனைப் பறிகொடுத்துவிட்டு இரண்டு பிள்ளையளோடை றோட்டில நிக்கேக்க எந்த ஊர் அவளுக்கு உதவினது. இப்ப அவள் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதித்து பிள்ளையளை வளக்கத் தொடங்க ஊராம் ஊர்..
சரி அதுக்கு அவள் ஏன் இப்பிடி பொட்டு வைச்சு கலர் கலரா பொட்டு வச்சுக் கொண்டு போக வேணும்
இஞ்சே.. உந்தக் கதையை விடு.. அவளுக்கு வயது 28. அவள் பார்க்கிறது 'சேல்ஸ் கேள்' வேலை. கடையளுக்கு ஆக்கள் வந்து சாமான்கள் வேண்ட வேணும். அவள் அழகா மலர்ந்த முகத்துடன் இருக்க வேணும். பொட்டு முகத்த அழகாக்கத்தான். அது ஒண்டும் புருசன் கொடுத்தது இல்ல..
ம்..ம்...நீயும் உன்ர கதையும் விதவை விதவைதான். அது 28டோ 58டோ.. விதவையெண்டா அதுக்கேத்த மாதிரி நடக்க வேணும்
இங்கே..உன்னைப்போல ஆக்களோட கதைச்சு வேலையில்ல..நீபோ.. உந்த மாதிரி கதையளோட இங்க என்னட்டை வராத. நீங்க அவளை வாழவும் விடமாட்டீங்கள். சாகவும் விடமாட்டீங்கள்.
இஞ்சே..அவள் சுதாவைப் பாத்தியே.. புருசன் இல்லாம இரண்டு பிள்ளையளையும் எப்பிடி வளர்க்கிறாள் எண்டு..
ஓம்..ஓம்.. எங்கபோய் காசு சம்பாதிக்கிறாளோ தெரியாது..
ஓமடி..கடையில சேல்ஸ் கேளாம்..
ஓ.. என்னத்த சேல்ஸ் பண்றாளோ தெரியாது..
ஹி..ஹி..ஓமடி பின்னேரம் நேரஞ் செல்லதான் வீட்டுக்கு வந்தாள்
ஓ கடையில வேலை எண்டு சொல்லுறாள். அதுக்க மினுக்கி கொண்டு வித விதமா உடுப்புகளும் பொட்டும் ஆளப் பாத்தியே..
பின்ன.. கடைக்கு எத்தனைபேர் வருவினம். ஹ..ஹ..
புருசன் இல்லையெண்ட கவலை கொஞ்சம் கூட முகத்தில தெரிய இல்ல.. புருசனை இழந்தவள் மாதிரியா தெரியுது..
ஓமடி.. இப்பிடியான பொம்பிளையளாலை எங்களைப் போல குடும்ப பெண்களுக்கு கெட்ட பெயர்
ஓமடி 'பொம்பிளயள் இப்பிடித்தான்..' எண்டுதானே வெளியில கதைக்கினம். இவளுக்கென்ன இரண்டு பிள்ளையள் இருக்கு அதுகள வளத்து விட்டா காணும் தானே? அதுக்கு இப்பிடி மினுக்கிக் கொண்டு போக வேணுமே..
ஆர் கண்டது வயது அப்பிடி
இது நல்ல கதை..18 வயசெண்டாலும், விதவை விதவை தானே..பிள்ளைகளும் இருக்கு..
ம்..இது கலி காலம்

No comments: