Friday, April 17, 2015

நினைப்பு



மனைவி : இஞ்சேப்பாஇ உங்களோட ஒரு விசயம் கதைக்கவேணும்….

கணவன் :ம்…சொல்லு…….

மனைவி :இப்பெல்லாம் நீங்க ஒவ்வொருநாளும் குடிக்கிறமாதிரி தெரியுது. என்ன ஏதும் பிரச்சினையா?

கணவன்: இல்லையே….

மனைவி : இதில மறைக்க என்னப்பா இருக்கு?வெளிப்படையா கதையுங்க……ஒவ்வொரு நாளும் குடிச்சிற்று வாறது எனக்கு தெரியுது.முந்தி இப்பிடி இல்ல நீங்க.கிளமையில ஒரு நாள் எடுப்பீங்க.இப்ப என்னாச்சு?

கணவன்:………………………………………………..

மனைவி : சிலவேளை நீங்களே இதை யோசிச்சு பாத்திருக்கமாட்டீங்க.பாட்டிக்கு போனா மட்டும் குடிக்கிறதெண்டு இருந்தீங்க.பிறகு கிழமைக்கு ஒருக்கால் எண்டு வந்துது.இப்ப ஒவ்வொரு நாளும் என்றாயிற்று.குடி உங்களை அடிமையாக்கீற்று எண்டு எனக்கு தோணுது.நீங்க என்ன நினைக்கிறீங்க?

கணவன் : சீ…சீ …அப்பிடி ஒண்டும் இல்ல…எனக்கு அளவு தெரியும்.என்ர நிலையை மறக்கிறமாதிரி குடிக்கமாட்டன்.

மனைவி : உங்கட ;தன்நிலையை மறக்கிற; அளவுக்கு நீங்கபோறதில்ல.அது எனக்கு தெரியும்.ஆனால் அந்த ‘தன்நிலையை மறக்கிற’ அளவு அல்லது அந்த ‘லிமிற்’ எள்று சொல்லுற அளவு முந்தி இருந்ததைவிட இப்ப கூடி இருக்க என்டு உணர்கிறீங்களா?

கணவன் : ………………………………………………..

மனைவி : முந்தி அரை கிளாஸ் எண்டால் இப்ப ஒரு கிளாஸ் எண்டு மாறியிருக்கும்.என்ன?சரிஇஇது உடம்புக்கும் கூடாது பொருளாதாரத்துக்கும் கட்டாது.பிள்ளையளும் வளந்திற்றுதுகள் அதுகளுக்கு கௌரவமாகவும் இருக்காது.

கணவன் : என்ன இப்ப இ குடிகாரன் எண்டு சொல்ல வாறியா?

மனைவி : இல்ல உங்கள நீங்களே கேட்டு பாருங்கள் ‘நான் குடிக்கு அடிமையாகிற்றனா? அல்லது அது என்ர கண்றோளில இருக்கா?’ எண்டு.

கணவன் : …………………………………………………………….

மனைவி : சரி. உங்கள நீங்களே பரிசோதித்து பாருங்க. ஒரு கிழமைக்க குடிக்காமல் இருந்து பாருங்கள்.முடிந்தால் நல்லது.முடியவில்லை என்றால் சொல்லுங்கள் ஏதாவது செய்வம்.இப்ப இதுகெல்லாம் டொக்டரிட்ட ஆலோசனை கேக்கலாம்.

கணவன் : சரி செய்து பாக்கிறன்.


நடப்பு  

மனைவி :  கடவுளே அவர் அதிகமா குடிக்க தொடங்கீற்றார்.அவர அதிலிருந்து விடுவித்து விடு தாயே………அவர் இந்த குடியை விட்டா நான் காணிக்கை தாறன் உனக்கு.

மனைவி : ஆண்டவா வரவர மோசமாகுது.ஒவ்வொரு நாளும் குடிச்சிற்று வாறார்.அவற்ற உடம்பும் கெட்டு காசும் வீணா போகுது……பிள்ளையளும் வளந்திற்றுதுகள்.நாளைக்கு அதுகளின்ர கௌரவமும் கெட்டுபோயிரும்.நானும் ஒவ்வொரு வெள்ளியும் விரதம் இருந்து உன்னட்ட வாறன்.எனக்கு ஒரு நல்ல வழியை காட்டு அப்பனே………..ஆண்டவா……..

மனைவி : நானும் ஒரு மாசத்துக்கு மேலா உன்னட்ட வந்திற்றன் கடவுளே………எந்த முன்னேற்றமும் இல்ல……இந்த வருசம் நடந்து கற்பூரச்சட்டி எடுக்கிறன்….கடவுளே அவர காப்பாத்து…..அந்த பழக்கத்தில இருந்து விடுவிச்சு விடு ஆண்டவா……..

No comments: